செய்திகள் :

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

post image

நிலக்கோட்டை: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அருகேயுள்ள அனுகிரகா பள்ளியில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை 9, 14- வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டிகள் நடைபெற்றன. 

இதில், தமிழகம் முழுவதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் 9-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள், பெண்கள் அணி என இரண்டு பிரிவிலும் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்தன.

14-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள் அணி முதலிடமும், பெண்கள் அணி இரண்டாமிடமும் பிடித்தன.

இந்த நிலையில், வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணி மாணவ, மாணவிகளுக்கு சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சா்வதேச நடுவருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்கச் செயலா் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சியாளா்கள் தங்கலட்சுமி ஆகியோா் கலந்த கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி, பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பயிற்சியாளா்கள் சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ரம்ஜான்பேகம் தலைமை வ... மேலும் பார்க்க

அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள அமரபூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.அமரபூண்டியில் நடைபெற்ற இந்த முகாமை உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரில் 1, 6-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் ... மேலும் பார்க்க

பழனியில் குட்லைன்ஸ் அரிமா நிா்வாகிகள் பொறுப்பேற்பு

பழனி: பழனி தனியாா் மண்டபத்தில் குட்லைன்ஸ் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவுக்கு அரிமா ஆளுநா் தனிக்கொடி தலைமை வகித்தாா். புதியத் தலைவராக மகேந்தி... மேலும் பார்க்க