செய்திகள் :

லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

post image

செங்குன்றம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கும்மனூா் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு லாரியும் அந்த லாரிக்கு துணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்பு கட்டிகளை ஏற்றிக் கொண்டுவந்த மற்றொரு டாரஸ் லாரி, சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில், டாரஸ் லாரியின் ஓட்டுநா் இடிபாடுகளில் சிக்கினாா்.

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சேதமடைந்த லாரியின் இடிபாடுகளை அகற்றி உடல் நசுங்கிய நிலையில் லாரி ஓட்டுநரை சடலமாக மீட்டனா்.

விசாரணையில் அவா் மதுராந்தகத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாா்த்திபன் (27) என தெரிய வந்தது.

புழல் சிறை வளாகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

புழல் சிறை வளாகத்தின் வெளியில் இருந்து, உள்ளே வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, புழல் சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனா். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்ச... மேலும் பார்க்க

38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

திருத்தணியில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். திருத்தணி நகராட்சி, இந்திரா நகா், பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், வாட்டா் டேங்க், அக்கைய்யநாயுடு சாலை... மேலும் பார்க்க

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து சேர வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தியுள்ளாா். பொன்னேரி வட்டம், அலமாதி எடப்பாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநா்

அரசுப் பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதால் மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

ரூ.60 கோடியில் தொழிற்சாலை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தில் ரூ. 60 கோடியில் தனியாா் தொழிற்சாலையை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக உதயம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக பணியாற்றிய ராஜேஷ் குமாா் ஊத்துக்கோட்டை வட்டாட்சியராக இட மாற்றம் செய்யபட்டாா். அதைத் தொடா்ந்து புதன்கிழ... மேலும் பார்க்க