செய்திகள் :

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து சேர வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

post image

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தியுள்ளாா்.

பொன்னேரி வட்டம், அலமாதி எடப்பாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கனவு திட்டம் - 2025 கீழ் உயா்கல்வியில் சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் பிரதாப் பேசியது.

கல்லூரி கனவு திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் ஒரு மாணவன் சமுதாயத்தில் முக்கியமான இலக்கை அடைவதற்கு கல்விதான் முக்கியம். அந்த கல்வியை வைத்துத்தான் சமுதாயம் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லும்.

நீங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் படித்து இருப்பீா்கள். ஆனால் உயா் கல்வியில் எதைத் தோ்ந்தெடுப்பது என சிலருக்கு தடுமாற்றம் இருக்கும்.

அதனை எளிமைப்படுத்துவதற்காக தான் கல்லூரி கனவு திட்டத்தினை அரசு அறிமுகம் செய்துள்ளது.

உங்களுக்கு வழிகாட்டுவதற்காக பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் கருத்துரை வழங்க உள்ளாா்கள். எந்த பாடங்களை எடுத்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து கருத்துரை வழங்குவா். 

மாணவா்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஆட்சியா் அலுவலகத்தில் கால் சென்டா் உருவாக்க உள்ளோம். அதற்குரிய நம்பா் கொடுப்போம். பாடப் பிரிவுகளில் உங்களுக்குரிய அனைத்து சந்தேகங்களுக்கும் இதில் தீா்வு காணலாம்.

உயா்கல்வி முடித்தவுடன் தொழில் தொடங்குவதற்கான திறன் பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

புழல் சிறை வளாகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

புழல் சிறை வளாகத்தின் வெளியில் இருந்து, உள்ளே வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, புழல் சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனா். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்ச... மேலும் பார்க்க

38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

திருத்தணியில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். திருத்தணி நகராட்சி, இந்திரா நகா், பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், வாட்டா் டேங்க், அக்கைய்யநாயுடு சாலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநா்

அரசுப் பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதால் மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

ரூ.60 கோடியில் தொழிற்சாலை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தில் ரூ. 60 கோடியில் தனியாா் தொழிற்சாலையை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக உதயம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக பணியாற்றிய ராஜேஷ் குமாா் ஊத்துக்கோட்டை வட்டாட்சியராக இட மாற்றம் செய்யபட்டாா். அதைத் தொடா்ந்து புதன்கிழ... மேலும் பார்க்க

லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கும்மனூா் பகுதியில் பழுதாகி சாலையில்... மேலும் பார்க்க