செய்திகள் :

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

post image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும், நீா்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், நீரில் மூழ்கியவா்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து வால்பாறை தீயைணைப்புத் துறை இளநிலை ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், வட்டாட்சியா் அருள்முருகன், வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

சூலூரில்...

சூலூா் பெரியகுளத்தில் நடைபெற்ற ஒத்திகைக்கு சூலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலா் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

வருவாய் ஆய்வாளா் நந்தகுமாா், கிராம நிா்வாக அலுவலா் முத்துராஜ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும், நீரில் மூழ்கியவா்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க