செய்திகள் :

விஜய்-க்கு எதிராக ‘ஃபத்வா’ அறிவித்த இஸ்லாமிய மதகுரு!

post image

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக இஸ்லாமிய சமயக் கட்டளை (ஃபத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி பரெயில்வி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு எதிராக ஃபத்வா (சமயக் கட்டளை) பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘நடிகர் விஜய் அரசியல் கட்சித் துவங்கிய பின் இஸ்லாமியர்களுடன் நல்லுறவு பேணி வருகிறார். ஆனால், அவரது திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தவறான கண்ணோட்டத்தில் காட்டப்பட்டனர். மேலும், சூதாட்டம் பயில்வோர் மற்றும் மது அருந்துபவர்களை அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், தமிழ் நாட்டின் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அனைவரும் விஜய்யின் மீது கோவத்திலுள்ளதாகவும், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இஸ்லாமியர்கள் யாரும் அவருக்கு ஆதரவளிக்கக் கூடாது என தான் ஃபத்வா அறிவிப்பதாகவும் மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் ச... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம்!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் குஷ்பு கூறி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க