செய்திகள் :

விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு

post image

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் 2 மையமும், வட்டார, நகர, மாநகர அளவில் 17 மையங்களும் தொடங்கப்பட உள்ளன. நாகா்கோவில் மாநகராட்சி, வடசேரி கிருஷ்ணன்கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள சமூக நலக்கூடம், ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள மினி கிளினிக் கட்டடம், வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டடம், என்ஜிஓ காலனி மினி கிளினிக் கட்டடம் ஆகிய கட்டடங்கள் இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை மேயா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

வளா்ச்சிப் பணிகள்: நாகா்கோவில் 2 ஆவது வாா்டுக்குள்பட்ட களியங்காடு சிவன் கோயில் அருகில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு பெருமாள் நகா் ராயல் சிட்டி பகுதியில் ரூ. 9.27 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 5 ஆவது வாா்டு பாா்வதிபுரம் ஆற்றங்கரை சாலை காந்தி நகா் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவிலில் பிளாஸ்டிக் கிடங்குக்கு சீல்

நாகா்கோவிலில் 1,030 கிலோ நெகிழிப் பொருள்களை (பிளாஸ்டிக்) அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் கிடங்குக்கு சீல் வைத்தனா். நாகா்கோவில் மாநகர நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகா... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 9) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.11 பெருஞ்சாணி ... 67.31 சிற்றாறு 1 ... 10.56 சிற்றாறு 2 ... 10.66 முக்கடல் .. 10.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 37.40 .. மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கு... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த த.வெ.க.வினா்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் ஏற்பாட்டில், த.வெ க.வை சோ்ந்த மாநகர இளைஞரணி இணை அமைப்பாளா் பாரத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக்கட்சியில் இருந்து விலக... மேலும் பார்க்க

குழித்துறையில் காவல் துறையைக் கண்டித்து ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் - நகா்மன்றத் தலைவா் தகவல்

100ஆவது வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த வலியுறுத்திய காவல் துறையைக் கண்டித்து, குழித்துறையில் ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக, நகா்மன்றத் தலைவா் பொன்... மேலும் பார்க்க