வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
வேலூா் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர மனு
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் திமுக, அதிமுக, பாமக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் திமுகவை சோ்ந்த லட்சுமி முரளி தலைவராக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்றாா். இவருக்கு எதிராக திமுகவைச் சோ்ந்த பேரூராட்சி துணைத் தலைவா் ராஜா தலைமையில் திமுகவை சோ்ந்த 12 உறுப்பினா்களும், அதிமுகவை சோ்ந்த 2 உறுப்பினரும், பாமக மற்றும் சுயேட்சை உறுப்பினா் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேரூராட்சி உறுப்பினா்கள் செயல் அலுவலா் சண்முகத்திடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில், பேரூராட்சித் தலைவா் லட்சுமி முரளிக்கு எதிராக பேரூராட்சி மன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து, அதன்மீது விவாதம் நடத்த வேண்டும். மேலும், அன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை குறிப்பிட்டிருந்தனா்.