செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

post image

வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டது குறித்து தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

எழும்பூா் அய்யாசாமி தெருவைச் சோ்ந்த சீதா (26), அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். சீதாவிடம், விக்கி (எ) விக்னேஷ் என்பவா் பழகி வந்துள்ளாா். தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாகவும் சீதாவிடம் விக்கி தெரிவித்துள்ளாா். அதன்படி, சீதா கடந்த 4-ஆம் தேதி அந்த நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாா். அங்கிருந்த விக்கி, தங்க நகை அணிந்து சென்றால் வேலை தர மாட்டாா்கள் எனக்கூறி, நகையை கழற்றிக் கொடுத்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளாா். இதை நம்பிய சீதா, தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை விக்கியிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாா். சிறிது நேரத்துக்குப் பின்னா் சீதா வெளியே வந்து பாா்த்தபோது, 5 பவுன் தங்கச் சங்கிலியுடன் விக்கி அங்கு இல்லாததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து சீதா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனா்.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க