செய்திகள் :

ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

post image

ஹைதி நாட்டில் குற்றவாளி கும்பல் தாக்கியதில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூற்ப்படுகின்றது.

கரிபியன் கடல் பகுதியிலுள்ள ஹைதி நாட்டில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் பணியமர்த்தப்பட்ட கென்யா நாட்டு அதிகாரி ஒருவர், அங்குள்ள பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து குற்றவாளி கும்பல்கள் நடத்திய தாக்குதலில் மாயமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு குற்றவாளி கும்பல்களினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் குழியினுள் சிக்கிய ஹைதி காவல் துறையினரை மீட்க நேற்று (மார்ச் 25) கென்யா நாட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது, அதில் ஒரு கென்யா நாட்டு அதிகாரி மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான அதிகாரியைப் பற்றிய தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படாத நிலையில் அவரை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஹைதியின் உள்ளூர் ஊடகங்களில் கென்யா அதிகாரியின் சீருடையில் கொல்லப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடப்பதைப் பதிவு செய்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, குற்றவாளி கும்பல்களின் வன்முறையினால் ஹைதி நாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டு தலைநகரை கைப்பற்ற முயற்சிக்கும் கும்பல்களை எதிர்த்து போரிட ஹைதி நாட்டுக்கு 1,000 பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என கென்யா உறுதியத்திருந்தது. இதனால், கடந்த 2024 ஜூன் மாதம் முதல் 800 அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க