செய்திகள் :

அக். 6ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா: நயினார் நாகேந்திரன் தகவல்

post image

வருகிற அக். 12 ஆம் தேதி மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"வருகிற அக். 6 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வருகிறார். சென்னை எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். தில்லி பயணத்தின்போது அவரது பயணம் குறித்து அவரிடம் பேசினேன்.

வருகிற அக். 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. அதில் கூட்டணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

டிடிவி தினகரனுடனான சந்திப்பு நட்புரீதியானது என்று அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருக்கிறார்" என்றார்.

பாஜகவுக்கு நீங்கள் தலைவரா? அண்ணாமலை தலைவரா? என்ற கேள்விக்கு, 'இந்த கேள்வி எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுவது போல இருக்கிறது' என்று கூறினார்.

இதனிடையே, நயினார் நாகேந்திரன் தில்லியில் ஜெ.பி. நட்டாவுடன் சந்திப்பு மேற்கொண்டபோது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

J.P. Nadda to visit Tamil Nadu on Oct. 6: Nainar Nagendran

இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்!

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்படைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம் குடியாத... மேலும் பார்க்க

கவின் கொலை விவகாரம்: சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கவின் கொலை விவகாரத்தில், காதலைக் கைவிடுமாறு கவின் மிரட்டப்பட்டார் என்று விசாரணையின்போது சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மாற்றுச் சமூகத்து பெண்ணை காதலித்தற்காக கவின் செல்வகணேஷ் நெல்லைய... மேலும் பார்க்க

நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (23-09-2025) காலை மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

வேலூரில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!

வேலூர்: வெலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய் பொடி தூவிவிட்டு, அவரிடமிருந்த 4 வயது குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பள்ளி சென்றுவிட்டு... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங... மேலும் பார்க்க

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது: டிடிவி தினகரன் உறுதி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ... மேலும் பார்க்க