செய்திகள் :

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்!

post image

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்படைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவள தெருவில் மென் பொறியாளர் வேணு என்பவர் தனது நான்கு வயது மகன் முகேஷை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் மிளகாய்ப்பொடியை முகத்தில் தூவி, தந்தையின் கண் எதிரே குழந்தையை காரில் கடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட அந்த வெள்ளை நிற சொகுசு காரில் கடத்தியதைக் கண்டு தந்தை வேணு, கூச்சலிட்ட நிலையில், அதிவேகத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.

இதனால் பதட்டத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்துற்கு வேணு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக குடியாத்தம் நகர காவல் துறையினர், அனைத்து நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தி நான்கு திசையிலும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே, மாவட்ட காவல் காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தற்போது, குழந்தை மாதனூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அருகே தனியாக நின்றுக் கொண்டிருந்ததை அறிந்து, தனிப்படை காவல்துறையினர் அங்கிருந்து மீட்டுள்ளனர்.

குழந்தையைக் கடத்திச் சென்றவர்கள் பிடிபடவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை கடத்தப்பட்ட இடத்திற்கும் மீட்கப்பட்ட இடத்திற்கும் சுமார் பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டர் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும், குழந்தையைக் கண்டுப்பிடித்த தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க: கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

In the incident of a 4-year-old boy being abducted in a car after being sprinkled with chili powder in Gudiyatham, the special police force rescued the boy within 2 hours.

அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!

அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு எஃகு கட்டமைப்பு பணிகளை ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகருக்கு நேரில் சென்... மேலும் பார்க்க

ஜாய் கிரிஸில்டா விவகாரம்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல் துறை சம்மன்!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றியதாக ஜாய் கிறிஸில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராககும்படி நீலாங்கரை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்... மேலும் பார்க்க

கவின் கொலை விவகாரம்: சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கவின் கொலை விவகாரத்தில், காதலைக் கைவிடுமாறு கவின் மிரட்டப்பட்டார் என்று விசாரணையின்போது சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மாற்றுச் சமூகத்து பெண்ணை காதலித்தற்காக கவின் செல்வகணேஷ் நெல்லைய... மேலும் பார்க்க

நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (23-09-2025) காலை மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

வேலூரில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!

வேலூர்: வெலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய் பொடி தூவிவிட்டு, அவரிடமிருந்த 4 வயது குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பள்ளி சென்றுவிட்டு... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங... மேலும் பார்க்க