செய்திகள் :

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது. எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து குறியீடும் சரிந்தன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 386.47 புள்ளிகள் சரிந்து 81,715.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.60 புள்ளிகள் சரிந்து 25,056.90 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு கிட்டத்தட்ட 0.9% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.5% சரிந்தது.

சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை சரிந்த நிலையில் டிரெண்ட், என்டிபிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உயர்ந்து முடிவடைந்தன.

பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளும், பலவீனமான தொடக்கத்திற்கு வித்திட்ட நிலையில், முடிவில் பங்குச் சந்தை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஜியோ ஃபைனான்சியல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை சரிந்த நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், நெஸ்லே, என்டிபிசி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பவர் கிரிட் உள்ளிட்டவை உயர்ந்தன.

எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் அதாவது ஆட்டோ, ஐடி, மீடியா, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் ஆகியவை 0.5 முதல் 2% சரிவுடன் முடிவடைந்தன.

மார்ஃபி ரிச்சர்ட் பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் பங்குகள் உயர்தன. விரைவு வர்த்தகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் மறுசீரமைப்பும், ராபிடோவில் உள்ள பகுதி பங்குகளை விற்றதாலும் ஸ்விக்கி நிறுவன பங்குகள் 2% சரிந்தன. ரூ.475 கோடி ஆர்டரை கையகப்படுத்திய நிலையில் ரெஃபெக்ஸ் பவர் பங்குகள் 2% உயர்ந்தன.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப், இந்தியன் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், கனரா வங்கி, ஆதார் ஹவுசிங், மாருதி சுசுகி, ஆம்பர் எண்டர்பிரைசஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,551.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு சற்றே சரிந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.28 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $67.82 ஆக உள்ளது.

இதையும் படிக்க: ஹோண்டா 2 சக்​கர வாகன விற்​பனை மித​மா​கச் சரிவு

Benchmark indies extended the losing streak for a fourth session on September 24, as Nifty 50 slipped below 24,100 on all-round selling except FMCG.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!

மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவ... மேலும் பார்க்க

ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ்: 2025 நவம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆக்டவியா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் 2023ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி, அதிகம் விற்பனையாகிவந்த பார்லே-ஜியின் ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சற்றுக் குறைந்துள்ளது.இந்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில், இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப் பதிவிடப்படும் வாட... மேலும் பார்க்க