செய்திகள் :

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

post image

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..

தில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று(செப்.23) நடைபெற்றது.

தமிழகத்தின் சார்பில், சிறந்த படத்துக்காக பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்களைத் தவிர்த்து ஹிந்தியில் நடிகர் ஷாருக் கான், மலையாளப் படத்துக்காக நடிகை ஊர்வசி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வர்ணனையாளர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது... ‘த்ரிஷா தோசர்' என அழைத்ததும் ‘க்யூட்டாக’ சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்த நான்கு வயதே ஆன அவர் மேடைக்கு வந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதைப் பெற்றுக்கொண்டார்.

அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அந்தச் சிறுமி விருது பெறும்போது ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் வியப்பாக பார்த்தனர்.

யார் இந்த த்ரிஷா தோசர்?

2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் - 2’ வெளியானது.

கதையின் முக்கிய கதாபாத்திரமான சைதன்யா, நீண்ட நாள்களுக்குப் பின்னர், தன்னுடைய தாய், உடன் பிறப்புகளைச் சந்தித்தபின் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் தோல்வியடைந்தது. இதில், சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார்.

த்ரிஷா தோசரின் அப்பாவித்தனமான நடிப்பு மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்துள்ளது. மேலும், இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் த்ரிஷா தோசர் பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோசருக்கு முதல் படம் என்றாலும், 'நாள் 2' படத்தில் தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா தோசர்.

இதையும் படிக்க... பிக் பாஸுக்கு செல்லும் மற்றொரு ஹார்ட் பீட் தொடர் பிரபலம்!

4-Year-Old Treesha Thosar Creates History, Becomes Youngest Ever to Win Best Child Artist at 71st National Film Awards

மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.10-ஆம் வகுப்புக்கான ப... மேலும் பார்க்க

மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!

கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்... மேலும் பார்க்க

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால்... மேலும் பார்க்க

லடாக்கில் வெடித்த மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டு... மேலும் பார்க்க