செய்திகள் :

பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி!

post image

கைவிடப்பட்ட பாகிஸ்தானிய பெண் குழந்தையை, சீன தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இன்று அந்த பெண் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு நட்சத்திரமாக ஜொலிப்பதோடு, தனது ஆரம்பகால ரசிகர் ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சவுத் மார்னிங் போஸ்ட்படி, ஃபேன் சிஹே என்ற அந்தப் பெண் பாகிஸ்தானில் பிறந்தவர். கைக்குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட அவரை, அங்கு பணிபுரிந்தபோது சீனத் தம்பதியினர் தத்தெடுத்தனர், பின்னர் அவர்கள் சீனாவிற்கு திரும்பி ஹெனான் மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு சிஹே, நூடுல்ஸ் சாப்பிட்ட வீடியோ ஒன்று எதிர்பாராதவிதமாக வைரலாகி, ஒரே இரவில் சமூக ஊடக நட்சத்திரமானார்.

அவரது எளிமையான கிராமத்து வாழ்க்கை முறை மற்றும் விவசாயப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களுக்கு 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் ரசிகர்களாகினர்.

ஆரம்பகால ரசிகர் ஒருவர், சிஹே மீது அதிக அக்கறை காட்டியுள்ளார். இவரும் சந்தித்து பேசியிருக்கிறார். நாளடைவில் அது காதலாக மாறியது. ஃபேனின் சமூக ஊடக வளர்ச்சிக்கு முழுமையாக ஆதரவளிக்க விரும்பிய அந்த ரசிகர், தனது வேலையை விட்டுவிட்டு வீடியோ எடுப்பது, எடிட் செய்வது மற்றும் ஃபேனின் வளர்ப்பு பெற்றோருக்கு விவசாயப் பணிகளில் உதவுவது என முழுநேரமும் அவருடனேயே இருக்கத் தொடங்கினார்.

மூன்று வருட காதலுக்குப் பிறகு, இந்த ஜோடி செப்டம்பர் 17 அன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இரு குடும்பத்தாரின் ஆசீர்வாதங்களுடன் மிகவும் எளிமையாகவும், பாரம்பரிய முறையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

மபி: "உன் நாய் என் பூனையைக் கடிக்குது" - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சேர்ந்த சுக்ராம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த அன்பு வை... மேலும் பார்க்க

பாலி: சுற்றுலா சென்ற இடத்தில் இறந்துபோன இளைஞர்; ’இதயம் இல்லை’ - பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

பாலி தீவில் இறந்த ஒரு இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது..ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பாலிக்கு சுற்றுலா சென்றிருக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்ப... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரு... மேலும் பார்க்க

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது. சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீ... மேலும் பார்க்க