செய்திகள் :

ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ்: 2025 நவம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

post image

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆக்டவியா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் 2023ஆம் ஆண்டில் ஆக்டவியாவை நிறுத்தியது. இருப்பினும் இந்த பிராண்ட் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் செடானின் செயல்திறன் பதிப்பான ஆக்டவியா ஆர்எஸ்-ஐ காட்சிப்படுத்தியது.

செக் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளர் ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ் 2025 நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

ஸ்கோடா விரைவில் இந்தியாவில் ஆக்டவியா ஆர்எஸ்-யின் 4வது தலைமுறை மாடல்களை வெளியிடும். இதில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சனைப் பயன்படுத்துகிறது.

இது அதிகபட்சமாக 265 எச்.பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி. மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த காரானது 6.4 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். மணிக்கு 250 கி.மீ வேகத்தை எட்டும்.

தோற்றத்தைப் பொருத்தவரை கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடிடி, ஆர்எல்கள் இடம்பெறும். இருக்கை, டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம் பெறும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ், பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படுவதால் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 53 லட்சத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda is planning to launch the new Octavia RS in India.

இதையும் படிக்க:அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: ஒடிசா அரசு

ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 35.5% உயர்ந்து ரூ.828 கோடியாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, திங்கட்கிழமை ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கிட்டத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!

மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவ... மேலும் பார்க்க

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது. எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து குறியீடும் சரிந்தன.வர்த்தக ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி, அதிகம் விற்பனையாகிவந்த பார்லே-ஜியின் ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சற்றுக் குறைந்துள்ளது.இந்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.75ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், அமெரிக்க எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில், இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம்... மேலும் பார்க்க