கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, ...
ஜிஎஸ்டி 2.0: ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை குறைந்தது! விலைகளில் நடந்த மேஜிக்
சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி, அதிகம் விற்பனையாகிவந்த பார்லே-ஜியின் ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சற்றுக் குறைந்துள்ளது.
இந்தியாவில், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் மீது, ஜிஎஸ்டி 2.0 நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லும் அளவுக்கு ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
அதாவது, விலை குறைந்த, ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள், பொதுவாக அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், விலையை உயர்த்தாமல், பல ஆண்டு காலமாக, ரூ.5க்கு விற்பனையாகி வந்த பார்லே-ஜி பிஸ்கெட் விலை தற்போது ரூ.4.45க்கு விற்பனையாகிறது.
அது மட்டுமல்ல, இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சாக்லேட் விலைகள் 88 பைசாவாகக் குறைந்திருக்கிறது. இனி, ஒரு ரூபாய் சில்லறை இல்லை என ஒரு சாக்லேட் கொடுக்க முடியாத நிலை பாவம் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா, ஒரு பாக்கெட் வாங்கினால் போதும் இரண்டு தலைக்கு என்ற நிலையில் இருக்கும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.2 ஷாம்பு பாக்கெட் விலைகளும் கணிசமாகக் குறைந்துள்ளது. இனி, அவை ரூ.1.77க்கு விற்பனையாகும்.
ஆனால், கையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்குவோருக்கு இந்த விலைக் குறைப்புகள் எல்லாம் சென்று சேருமா என்றால் சேராது என்றே கணிக்கப்படுகிறது.
பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் பூஜ்ய வரி முறைக்கும், அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலும், தேவையான சேவைகள் மற்றும் சரக்கு 18 சதவீத வரி விதிப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.