செய்திகள் :

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

post image

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை வளாகத்தில் எட்டயபுரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பட்டம்
ஆர்ப்பட்டம்

இது தொடர்பாக எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா பேசுகையில், ”தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும் வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப்புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் போன்ற வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எட்டயபுரம்.

சினிமாவில் பேசியதை வைத்துக் கொண்டு வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால் கடந்த 2 தலைமுறைகளாகப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். முதலில் சினிமாதானே என்று விட்டது பின்னாளில் இவ்வளவு தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

சிலர் இன்றைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்துப் பேசும் நிலை உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். வரலாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

அந்தச் சமயத்தில் என்ன நடந்து.. ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன. அதை எடுத்துப் பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும்.

இந்தத் தவறான தகவலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க

கூடலூர்: மனிதர்களைத் தாக்கி வந்த யானை ராதாகிருஷ்ணன்; கும்கிகளின் உதவியோடு வனத்துறை பிடித்தது எப்படி?

நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். தென்னிந்திய யானை வழித்தடங்களின் இதயம் என்று அழைக்கப்படும் கூடலூர் அருகில் உள்... மேலும் பார்க்க