செய்திகள் :

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

post image

தமிழக முன்னாள்  பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் அண்ணாமலையுடனான  சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார்.

“அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக இருந்தப்போதுதான் எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். டெல்லியில் உள்ளவர்களை அவர் சந்தித்துப் பேசி எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

ஆனால் நாங்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. அண்ணாமலையின் முயற்சியால் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்தது.

அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். நான் கூட்டணியில் இருந்து விலகியபோது மீண்டும் இணைய அண்ணாமலை வலியுறுத்தினார். அவரசப்பட வேண்டாம் என்று சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது.

செங்கோட்டையன், நாங்கள் என எல்லோரும் எதற்காக டெல்லிக்கு சென்றோம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

எங்களின் நலம் விரும்பிகள் நாங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும் என்று சொன்னார்கள். அதற்காக தான் காத்திருந்தோம்.

அதற்கு வாய்பில்லை என்று தெரிந்த பிறகு தான் வெளியேறினோம். என்னை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்த நினைத்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

இருந்தாலும் என்னால் அந்தக் கூட்டணியில் இருக்க முடியவில்லை. என் நண்பர் அண்ணாமலை வந்தபோதும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.

அரசியலைத் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். என்மேல் பிரியமாக இருக்கக்கூடியவர். அவர் என்னை சந்திக்கும்போது இதைதான் கேட்பார் என்று தெரியும்.

அதைப் பற்றி பேசிவிட்டு நாங்கள் மற்ற விஷயங்களைத் தான் பேசினோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மால்டோவாவை ஆக்கிரமிக்க ஐரோப்பா திட்டமா? - ரஷ்யா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கப் போவதாகவும் அதற்கான நேட்டோவின் படை உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு (SVR) தெரிவ... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி! - இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

டொனால்ட் ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இலுமினாட்டி எனும் சதிகோட்பாட்டை நம்புபவர்கள் கூட ட்ரம்பை இலுமினாட்டி சங்கத்தின் உறுப்பினர் என நம்ப மாட்டார்கள் .எப்படி ட்ரம்பை இலுமினாட்ட... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ் அதிபரின் ட்விஸ்ட்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் உலக... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறு... மேலும் பார்க்க