செய்திகள் :

உக்ரைனின் பக்கமே இந்தியா! - அமெரிக்காவிடமிருந்து முரண்படும் ஸெலென்ஸ்கி

post image

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எதிர்வினையாற்றியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், உக்ரைன் போர் தொடர்ந்து நீடிக்க இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார்.

நியூயாா்க் நகரில் செவ்வாய்க்கிழமை(செப். 23) தொடங்கிய ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் டிரப்ப் பேசும்போது: “ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன” என்றார்.

இந்த நிலையில், இது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அளித்துள்ளதொரு பேட்டியில் பேசும்போது, “இந்தியா, உக்ரைனின் பக்கமே பெரும்பாலாகச் செயல்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. எனினும், எரிசக்தி வணிகத்தில் ஓரிரு சவால்கள் இருக்கின்றன. அவற்றுக்குரிய தீர்வு எட்டப்பட வேண்டும். அதிபர் டிரம்ப்பால் அவற்றைச் சமாளித்துக்கொள்ள இயலும்.

நம்மால் இயன்ற அனைத்தையும் முயற்சிக்க வேண்டுமே தவிர, அதேவேளையில், இந்தியாவையும் விட்டுவிட முடியாது. அவர்கள்(இந்தியா) ரஷியாவின் எரிசக்தி துறையைச் சார்ந்திருக்கும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்வர்.

இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகள் மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து இணக்கமாகச் செயல்படுவது, இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற உதவி செய்யும்” என்றார்.

Ukrainian President Volodymyr Zelenskyy said "India is mostly with Ukraine", differing with his American counterpart, Donald Trump

பப்ஜியால் நேர்ந்த கொடூரம்! குடும்பத்தினர் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரைச் சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (செப். 24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின் கஹ்னா பகுதி... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர்... மேலும் பார்க்க

பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழ... மேலும் பார்க்க

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

தன்னுடைய காதலனை விவாகரத்து செய்ய அவரது மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண், தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டார்.ஆனால், ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தபிறகு, காதலனைப் பிடிக்கவி... மேலும் பார்க்க

9 நாடுகளுக்கு சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்! ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி! இந்தியர் நிலை என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மற்றும் பணி விசாக்களை 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்... மேலும் பார்க்க