செய்திகள் :

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க பிரதமர் ஷரீஃப், நியூயார்க்கில் இருந்து நாளை (செப். 25) வாஷிங்டன் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் நாளையே மீண்டும் நியூயார்க் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில், முதல்முறை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கின்றார். இறுதியாக, 2019 ஆம் ஆண்டின் ஜூலையில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், தனது ஆட்சியில் பாகிஸ்தான் அரசுடனான உறவுகளை முற்றிலும் புறக்கணித்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பின்னர் மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப், வெளிப்படையாக பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

Pakistani Prime Minister Shahbaz Sharif is reportedly traveling to Washington to meet US President Donald Trump.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர்... மேலும் பார்க்க

உக்ரைனின் பக்கமே இந்தியா! - அமெரிக்காவிடமிருந்து முரண்படும் ஸெலென்ஸ்கி

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், உக்ரைன் ... மேலும் பார்க்க

பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழ... மேலும் பார்க்க

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

தன்னுடைய காதலனை விவாகரத்து செய்ய அவரது மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண், தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டார்.ஆனால், ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தபிறகு, காதலனைப் பிடிக்கவி... மேலும் பார்க்க

9 நாடுகளுக்கு சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்! ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி! இந்தியர் நிலை என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மற்றும் பணி விசாக்களை 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்... மேலும் பார்க்க

தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை

தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை.தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கு... மேலும் பார்க்க