வாக்காளர் பெயரை நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம்!
தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை
தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை.
தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கும் ஏரியின் கரைகள், சூறாவளிக் காற்றினால் உடைந்து, ஏரி நீர் முழுக்க ஊருக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் சென்ற நிலையில் மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல், தைவானை சூறையாடி வரும் ரகாசா சூறாவளி, தற்போது சீனாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மையம்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.