செய்திகள் :

மபி: "உன் நாய் என் பூனையைக் கடிக்குது" - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி

post image

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சேர்ந்த சுக்ராம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். திருமணத்திற்கு முன்பு இந்த வளர்ப்பு பிராணிகள் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டதால்தான் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து திருமணத்திற்கு வித்திட்டது.

ஆனால் அந்த வளர்ப்பு பிராணிகளே இப்போது அவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. சுக்ராம் ஏற்கனவே தனது வீட்டில் நாய், முயல் மற்றும் மீன் தொட்டி வைத்திருக்கிறார். அவரது மனைவி திருமணமாகி சுக்ராம் வீட்டிற்கு வரும் போது தன்னுடன், தான் ஆசையாக வளர்த்த பூனையை அழைத்து வந்தார்.

விவாகரத்து
விவாகரத்து

ஆரம்பத்தில் அவர்களுக்குள் எந்த வித பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. அவர்கள் சண்டை போட்டுக்கொள்ளாவிட்டாலும் அவர்களின் வளர்ப்பு பிராணிகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொண்டன.

அடிக்கடி பூனை மீன் தொட்டிக்கு அருகில் நின்று அதிலிருந்த மீனை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது. நாய், பூனையோடு சண்டையிட்டுக்கொண்டது. நாய் எப்போதும் பூனையைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் பூனைப் பயந்து அடிக்கடி சாப்பிடாமல் இருந்தது.

இது சுக்ராம் மனைவிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் கணவன், மனைவி இடையே மோதல் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட மோதல் அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.

இதனால் இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து இப்பிரச்னை குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்றது.

இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து சுக்ராம் கூறுகையில், ''திருமணத்திற்கு முன்பு வளர்ப்பு பிராணியைக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லி இருந்தேன். அப்படி இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் பூனையை அவரது வீட்டிலிருந்து எடுத்து வந்தார். பூனை அடிக்கடி மீன் தொட்டியில் ஏறி நிற்கிறது'' என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி!

கைவிடப்பட்ட பாகிஸ்தானிய பெண் குழந்தையை, சீன தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இன்று அந்த பெண் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு நட்சத்திரமாக ஜொலிப்பதோடு, தனது ஆரம்பகால ரசிகர் ஒருவ... மேலும் பார்க்க

பாலி: சுற்றுலா சென்ற இடத்தில் இறந்துபோன இளைஞர்; ’இதயம் இல்லை’ - பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

பாலி தீவில் இறந்த ஒரு இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது..ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பாலிக்கு சுற்றுலா சென்றிருக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்ப... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரு... மேலும் பார்க்க

`காசா போரில் பாதித்தவர்களுக்காக'- சோசியல் மீடியா மூலம் ரூ.5 கோடி வசூல்; மும்பையில் சிக்கிய கும்பல்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... மேலும் பார்க்க

சென்னை: 150 ஆண்டுக்கால சேவையைக் கொண்டாடும் தியோசாபிகல் சொசைட்டி - இங்கு என்ன இருக்கிறது?

சென்னை அடையாறில் அமைந்துள்ள தியோசாபிகல் சொசைட்டி தனது 150வது ஆண்டுக்கால சேவையை நிறைவு செய்திருக்கிறது. சென்னை சலசலப்பில் இருந்து சற்றே தனித்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு அடர்ந்த மரங்கள், விலங்கு மீ... மேலும் பார்க்க