செய்திகள் :

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள உதவி மருத்துவ அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். : 13/MRB/2025

பணி: Assistant Medical Officer (Ayurveda)

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.2,05,700

வயதுவரம்பு: 1.7. 2025 தேதியின்படி 37-க்குள் இருக்க வேண்டும் . எஸ்சி, எஸ்டி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

தகுதி: Ayurveda(HPIM/GCIM/LIM), B.A.M.S. தேர்ச்சியுடன் Central Board of Indian Medicine, Tamilnadu Indian Medicine இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ் தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். கணினி வழித் தேர்வில் ஆயுர்வேத பாடப்பிரிவிலிருந்து கொள்குறிவகை கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் அமைந்திருக்கும். தமிழ்மொழி திறன் தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படை யில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பொது பிரிவினர் ரூ.1,000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.9.2025

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

Applications are invited only through online mode for Direct Recruitment to the post of Assistant Medical Officer (Ayurveda) on temporary basis in Tamil Nadu Medical Service

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

ரயில்வே மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பாரா மெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்ளிடம் இருந்து செப்.18-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:அறிவிப்பு எண். : 03/20... மேலும் பார்க்க

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி- இல் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். ICSR/PR/Advt.146/2025 பணி: Proje... மேலும் பார்க்க

நாள் ஒன்றுக்கு ரூ. 750 சம்பளத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசின... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 515 ஆர்ட்டிசன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த விர... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

குவகாத்தியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி... மேலும் பார்க்க