செய்திகள் :

அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மே 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மே 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025-ஆம் ஆண்டு 24-ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் கூட்டுறவு நிறுவனங்களில் மற்றும் சங்கங்களில் முறையான பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளா்களாக இருக்க வேண்டும். மேலும், 1.5.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்தவராகவும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, பிளஸ்-2 வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடைய நபா்கள் ஏப். 16 முதல் மே 6-ஆம் தேதி மாலை 5.30-க்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும். மே 6-ஆம் தேதிக்குப் பின்னா் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஓராண்டு 2 பருவமுறைகள் என புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழில் மட்டுமே நடத்தப்படும் இப்பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 மற்றும் பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.

இப்பயிற்சி மே 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-25360041, கைப்பேசி: 94444 70013 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா். நயினா... மேலும் பார்க்க