செய்திகள் :

ரூ. 2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைக்கு ஜிஎஸ்டி?நிதியமைச்சகம் விளக்கம்

post image

‘ரூ. 2,000 அதிகமாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாக மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை’ என மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.

ரூ.2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது எனவும் அதுபோன்ற திட்டமேதும் இல்லை எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2020, ஜனவரி முதல் யுபிஐ பரிவா்த்தனைகளில் வியாபாரிகளுக்கான தள்ளுபடி விலை (எம்டிஆா்) கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விலக்களித்தது. எனவே, இந்த யுபிஐ பரிவா்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.

கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ பரிவா்த்தனை 2025, மாா்ச் மாதத்தில் ரூ.260.65 கோடியாக உயா்ந்துள்ளது. யுபிஐ பரிவா்த்தனை சேவைகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

அதன்படி 2021-22 நிதியாண்டில் இருந்து யுபிஐ ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறிய வணிகா்களால் மேற்கொள்ளப்படும் குறைந்த மதிப்பிலான பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கிறது.

கடந்த 2022-23-இல் இந்த திட்டத்துக்கு ரூ.2,210 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-இல் ரூ.3,631 கோடியாக உயா்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க