செய்திகள் :

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

post image

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், கடன் கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளின் இருப்புகளிலும், கடன் தொகைகளிலும் பெரிய அளவில் முரண் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர்களிடம் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வங்கியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை மதிப்பீட்டளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்குமார் பொதுமக்கள் அடகு வைத்த 8.250 கிலோ தங்க நகைகளை வங்கி மேலாளருடன் இணைந்து திருடியது தெரியவந்தது. உடனடியாக, ரமேஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஈரோடு கூட்டுறவு வங்கி
ஈரோடு கூட்டுறவு வங்கி

அப்போது நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமாருடன் இணைந்து வங்கி மேலாளர் கதிரவன் மற்றும் அவரின் நண்பரான செந்தில்குமார் ஆகியோர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் கதிரவன், நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.250 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அடகு வைத்த நகைககள் வங்கி ஊழியர்களால் திருடப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க