செய்திகள் :

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

post image

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், கடன் கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளின் இருப்புகளிலும், கடன் தொகைகளிலும் பெரிய அளவில் முரண் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர்களிடம் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வங்கியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை மதிப்பீட்டளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்குமார் பொதுமக்கள் அடகு வைத்த 8.250 கிலோ தங்க நகைகளை வங்கி மேலாளருடன் இணைந்து திருடியது தெரியவந்தது. உடனடியாக, ரமேஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஈரோடு கூட்டுறவு வங்கி
ஈரோடு கூட்டுறவு வங்கி

அப்போது நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமாருடன் இணைந்து வங்கி மேலாளர் கதிரவன் மற்றும் அவரின் நண்பரான செந்தில்குமார் ஆகியோர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் கதிரவன், நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.250 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அடகு வைத்த நகைககள் வங்கி ஊழியர்களால் திருடப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பி... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க