செய்திகள் :

அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

post image

ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.

அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத்தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18 ஆயிரத்து 799 உதவி லோக்கோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டது.

வீர தீர சூரன் புரமோஷன் பணிகள் துவக்கம்!

அதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 493 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே முதல்கட்ட கணினி வழித் தேர்வு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 1,315 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலான தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை... மேலும் பார்க்க

பாசன நீா் பரப்புகளில் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு!

தமிழகத்தில் பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளா்களுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா். அந்தத் துறையின் செயல்பாடுகள் குறி... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’! -முதல்வா் விளக்கம்

மொழிக் கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வா் தெரிவித்தாா். மத்திய நிதியமைச்சா் இதனை பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் த... மேலும் பார்க்க

சுய உதவிக் குழு மகளிா் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க மாவட்ட... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையி... மேலும் பார்க்க

நடிகை பிந்து கோஷ் காலமானார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நக... மேலும் பார்க்க