செய்திகள் :

அண்ணா பிறந்த நாள்: ``குடும்பப் பின்புலமற்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியல்'' - இ.பி.எஸ்

post image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது,

"தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!

அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!

இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி

ஆட்சி அமைக்க முடியுமா?

நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?

என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்

தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக!

குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். அண்ணா நாமம் வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஈரோடு: பெரியார் அண்ணா நினைவகத்தில் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்! - புகைப்படத் தொகுப்பு

ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈர... மேலும் பார்க்க

ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல... மேலும் பார்க்க

`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - கனிமொழி

நெல்லை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எழுச்சி மாநாடு, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்தது. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “க... மேலும் பார்க்க

10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா செங்கோட்டையன்! - அதிமுக-வில் என்ன நடக்கிறது?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தே... மேலும் பார்க்க

``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்டையன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்ற... மேலும் பார்க்க