செய்திகள் :

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

post image

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 1 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.

அதானி செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவித்ததாவது:

இந்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் வேடிக்கைதனமானது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது என்றார்.

குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் 2.2 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் 2.5 சதவிகிதம் வரை சரிந்தது.

அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தலா 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.

இந்தியாவின் முக்கிய குறியீட்டான நிஃப்டி 50 குறியீடு 0.4 சதவீதம் சரிந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தது.

வளைகுடாவிற்கும் அதானியின் முந்த்ரா துறைமுகத்திற்கும் இடையில் பயணிக்கும் டேங்கர் கப்பல்கள், தடைகளைத் தவிர்க்கும் வகையில் இது நடைபெறுவது பொதுவானவை என்றது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

இந்த ஆண்டு இதுவரை அதானி குழும பங்குகளில், அதானி போர்ட்ஸ் 16 சதவிகிதம் அதிகரித்து அதிக லாபம் ஈட்டியுள்ள நிலையில் அதானி டோட்டல் 11 சதவிதம் சரிந்து முடிவடைந்தது.

இதையும் படிக்க: இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க