செய்திகள் :

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

post image

பதவிப் பறிப்பு எதிரொலியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 1,000 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.

இதற்கு, பத்து நாள் கெடு அளிப்பதாகவும், அதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பதவிப் பறிப்பை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த மற்றும் கோபிசெட்டிப்பாளையம் பகுதி நிர்வாகிகளும் என சுமார் 2,000 நிர்வாகிகள் தங்களது பதவிகளையும் ராஜிநாமா செய்வதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதங்களை அனுப்பினர்.

இந்த நிலையில், கோபி செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.

இதுகுறித்து முன்னாள் எம்பி சத்தியபாமா கூறுகையில், “செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே லட்சியம்” எனத் தெரிவித்தார்.

Sathiyabhama MP, including 1,000 Sengottaiyan supporters, resign!

இதையும் படிக்க : செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் ... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்... மேலும் பார்க்க

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க