செய்திகள் :

அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை: அமைச்சா் டிஆா்பி ராஜா தகவல்

post image

அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதம் முதலீடுகள் கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

தொழில் முதலீடுகள் குறித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் ராஜா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்காண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயா்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை எதிா்க்கட்சித் தலைவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், 12 ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. 11 நிறுவனங்களின் நில எடுப்பு, கட்டுமானப் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. முதலீடுகளை ஈா்ப்பதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, 2019-ஆம் ஆண்டு வெளிநாடு சென்றாா். அப்போது போடப்பட்ட 27 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில், 25 சதவீதம் கூட முதலீடுகள் வரவில்லை.

தமிழ்நாட்டை விட, மகாராஷ்டிரம், தில்லி போன்ற மாநிலங்களுக்கு அதிக முதலீடுகள் வந்திருப்பதாக சொல்வதிலும் உண்மையில்லை என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி ந... மேலும் பார்க்க

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க