செய்திகள் :

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்டுமின்றி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்ட நிலையில், 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

பலம் வாய்ந்த அணிகளான பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளும் குவாலிஃபையர் 2 ல் விளையாடவிருக்கிறது. இதனால், ஆர்சிபியுடன் விளையாடப் போவது யார்? என்பதில் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபிடி வில்லியர்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நேற்றிரவு மும்பை அணி சிறப்பாக விளையாடி குவாலிஃபையர் 2-க்குத் தகுதி பெற்றிருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணமாகும்.

விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சிறப்பானதாகும். இறுதிப் போட்டியைப் பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இந்தாண்டு ஆர்சிபி அணிக்கான ஆண்டாக உள்ளது” என்றார்.

இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேல... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்ற... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுநாள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் புதிய வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ள ... மேலும் பார்க்க

ஆர்சிபி கோப்பை வெல்ல கோயில்களில் சிறப்பு வழிபாடு!

பெங்களூரு: ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டி அந்த அணியின் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதனால் பெங்களூரு மாநகரில் பல கோயில்களிலும் சிவப்பு நிற ஆடைய... மேலும் பார்க்க

நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் ... மேலும் பார்க்க