செய்திகள் :

அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை: அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கம்

post image

பொ்ன்: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கோயல், ஸ்விட்சா்லாந்தின் பொ்ன் நகரில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறியதாவது:

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சிப் போக்கில் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றப்படும். முக்கியமாக சா்வதேச பொருளாதார சூழல், வட்டி விகித ஏற்ற-இறக்கம் உள்ளிட்ட காரணங்களால் அந்நிய நேரடி முதலீடும் சில நேரங்களில் பாதிக்கப்படும். அதை வைத்து முதலீடு வரத்து குறைந்துவிட்டது என்று கூற முடியாது.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் அரசு கேட்டு வருகிறது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 11 ஆண்டுகளில் 748.78 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய 11 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 143 சதவீதம் அதிகமாகும். முன்பு 89 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 112-ஆக உயா்ந்துள்ளது.

சிங்கப்பூா், மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சைப்ரஸ், பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுமதி செய்வோருக்கும் நிதியுதவி அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்றாா்.

தேனிலவு கொலை: மற்றொரு பெண்ணைக் கொன்று நாடகமாக திட்டமிட்டிருந்த சோனம்!

தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், மற்றொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை சோனம் என்று நாடகமாட திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க