செய்திகள் :

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

post image

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு சிறு வீட்டில் இருந்த செல்போன் ஒலித்தது. அப்போது தெரியாது, அவர்களுக்கு மனம் உடைந்துபோகும் ஒரு செய்தி கிடைக்கப்போகிறது என்று.. அன்று பிப்ரவரி 14ஆம் தேதி. போனில் வந்த எண் புதிதாக இருந்தாலும், அழைத்த குரல் மிகவும் தெரிந்த குரல்தான். ஆனால் அது ஆழ்ந்த துக்கத்தால் கனத்திருந்ததால் முதலில் பேசுவதை இவர்களால் யார் என்று கணிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அடுத்த வார்த்தை அவர்களது நெஞ்சில் இடியைப் பாய்ச்சியது. அதுதான். 33 வயதாகும் ஷாஜாதி கானின் குரல். இது என்னுடைய கடைசி அழைப்பு என்றுதான் அவர் பேசத் தொடங்கினார்.

இந்த வார்த்தை அவர்களது பெண்ணுக்கு என்னாகுமோ என்று ஏற்கனவே துக்கத்தில் இருந்த குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போனில் பேசிய ஷாஜாதியின் சகோதரர் ஷாம்ஷெர், எப்படி இருக்கிறாய் என்ற கூட கேட்க முடியாமல் தொண்டை விக்கித்துப்போக, தொடர்ந்து ஷாஜாதியே பேசினார். தூக்கிலிடும் முன்பு, உனது கடைசி விருப்பம் என்ன என்று கேட்டார்கள். நான், எனது அம்மா, அப்பாவுடன் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால்தான் எனக்கு போன் போட்டுக் கொடுத்தார்கள் என்று சொன்னபோது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுதது. அதன்பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களது மகளுக்கு என்னவானது என்பது குறித்து தெரியாமல் ஒட்டுமொத்த குடும்பமும் தவித்து வந்த நிலையில்தான், அவர்களிடம் பேசிய அன்று மறுநாளே, ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா பகுதியைச் சோ்ந்த ஷாஜாதி கான் (33), கடந்த 2021-ஆம் ஆண்டு அபுதாபி சென்று, குழந்தை பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அவா் பராமரிப்பிலிருந்த 4 மாத குழந்தை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி இறந்தது. ஷாஜாதி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபுதாபி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

அவருக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அபுதாபியின் அல் வாத்பா சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெற்றோருடன் தொலைபேசி மூலம் பேச சிறை அதிகாரிகள் அனுமதி அளித்து, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனா். தொலைபேசியில் பேசும்போது, ‘இதுவே உங்களுடனான எனது கடைசி உரையாடலாக இருக்கும்’ என்று தனது பெற்றோரிடம் ஷாஜாதி குறிப்பிட்டுள்ளாா்.

அதன் பிறகு, தனது மகள் குறித்த எந்தத் தகவலும் தெரியாத நிலையில், அவரின் நிலை குறித்து தெரியப்படுத்த வலியுறுத்தி ஷாஜாதியின் தந்தை ஷபீா் கான் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தனது மகள் உயிருடன் உள்ளாரா? அல்லது தூக்கிலிடப்பட்டாரா? என்பதை ஷபீா் கான் அறிய விரும்புகிறாா்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘ஷாஜாதி கானுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. வரும் 5-ஆம் தேதி அவருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அபு தாபியில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கில் அவரின் பெற்றோரை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மரண தண்டனையிலிருந்து அவரை காக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தில் அவா் தரப்பில் வாதாட சட்ட நிறுவனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், அபுதாபியில் குழந்தைகளுக்கு எதிரான கொலையை கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி, ‘இது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க