செய்திகள் :

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

post image

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “எல்லோரும் ஒரு ஒப்பந்தம் செய்து அதில் ஒரு பங்கைப் பெற விரும்புகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர்கள், உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டது நினைவில் இருக்கும். சரி, நேற்றுதான் நாங்கள் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களுக்கு சிறந்த ஒப்பந்தங்கள் வரவிருக்கின்றன.

நாங்கள் எல்லோருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை. ஆனால், நாங்கள் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறோம். ஒருவேளை இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம்.

நாங்கள் அனைத்து நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. சில நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்றுகூறி, 25, 35, 45 சதவிகிதம் செலுத்த வேண்டும் என்று கூறுவோம். அவர்களிடம் கண்டிப்பாக இருப்போம். அதுதான் சுலபமான வழி. அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்ல முடியாது.

சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மையிலேயே இது நம்பமுடியாத விஷயம்தான். இருந்தாலும், ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது” என்றார்.

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் தெளிவாக எதுவும் கூறவில்லை என்றால், பூமியில் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமங்களில் வர்த்தகம் செய்யப் போவதாக வெள்ளை மாளிகை தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

US President Donald Trump announced a trade deal with China on rare earths and hinted at a major upcoming deal with India, aiming to strengthen US global trade ties and supply chain stability.

இதையும் படிக்க... டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ‘ஸ்டாப் கிளாக்’! - ஐசிசி அறிமுகம்

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில்... மேலும் பார்க்க

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின... மேலும் பார்க்க

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 260 போ் காயமடைந்தனா்.இது கு... மேலும் பார்க்க

வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்

வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல்! 20 மாணவர்கள் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானதாக, அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. தலைநகர் பாங்குயி... மேலும் பார்க்க