செய்திகள் :

அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்

post image

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்ட 50 சதவிகித வரியை விதித்தால், தனது வர்த்தகப் போரில் வரி அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

இந்த வரியை உடனடியாக நீக்கப்படாவிட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து ஒயின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருள்கள் மீது 200% வரி விதிக்கப்படும் என்றார்.

இந்த அதிகப்படியான வரிவிதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று ... மேலும் பார்க்க

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு காரணமாக 31 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தில் 2-வது அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எத்தியோப்பியா. இங்கு 12 கோடிக்கும் மேலானோர் ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூருக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிஐஏ விமானம் பிகே-306 இன் பின்புற சக்கரங்களில் ஒ... மேலும் பார்க்க

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க