தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து குவித்ததாக 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.