செய்திகள் :

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

post image

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து குவித்ததாக 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதன... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது ... மேலும் பார்க்க

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க