செய்திகள் :

அம்பாசமுத்திரம் அருகே 10 நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி பிடிபட்டது!

post image

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாள்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயில்கள், குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த கரடியை பிடிக்க கடந்த 20ஆம் தேதி கூண்டு வைக்கப்பட்டது.

கரடியைப் பிடிப்பதற்கு கூண்டில் பலாப்பழம், வாழைப்பழம், அன்னாச்சி பழம், நெய், தேன், உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன. கடந்த 10 நாள்களாக கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி கரடியானது அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதனால் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .

இந்த நிலையில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரடியானது அதற்காக வைக்கப்பட்ட கூண்டில் வசமாக சிக்கியது.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

தகவல்அறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கிய கரடியை ஆய்வு மேற்கொண்டார் .

தொடர்ந்து, ஆக்ரோஷமாக இருந்த கரடிக்கு பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர்.

கரடி முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கரடி ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பு கோயில் பூசாரி, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டு வழி அனுப்பி வைத்தார்.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க