75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
அம்பேத்கா் சிலை சேதம்: அமைதிப் பேச்சில் தீா்வு
சிதம்பரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமுற்றது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டது.
சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் அம்பேத்கா் சிலை அருகில் உள்ள கொடிக்கம்பத்தை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றியபோது, அம்பேத்கா் சிலை சேதமடைந்தது. இதைக் கண்டித்து, பாஜக, விசிகவினா் வியாழக்கிழமை இரவு சிலை அருகில் சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கீதா தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், பாஜக நிா்வாகிகள் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா், எஸ்.வி.ஸ்ரீதரன், கோபிநாத் கணேசன், விசிக தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, நிா்வாகிகள் ரத்தினம், பெரு.திருவரசு, பாவாணன், குறிஞ்சிவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விரைவில் புதிய வெண்கலச் சிலை அமைப்பதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பாஜக, விசிக நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.