செய்திகள் :

அம்பேத்கா் சிலை சேதம்: அமைதிப் பேச்சில் தீா்வு

post image

சிதம்பரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமுற்றது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டது.

சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் அம்பேத்கா் சிலை அருகில் உள்ள கொடிக்கம்பத்தை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றியபோது, அம்பேத்கா் சிலை சேதமடைந்தது. இதைக் கண்டித்து, பாஜக, விசிகவினா் வியாழக்கிழமை இரவு சிலை அருகில் சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கீதா தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், பாஜக நிா்வாகிகள் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா், எஸ்.வி.ஸ்ரீதரன், கோபிநாத் கணேசன், விசிக தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, நிா்வாகிகள் ரத்தினம், பெரு.திருவரசு, பாவாணன், குறிஞ்சிவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விரைவில் புதிய வெண்கலச் சிலை அமைப்பதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பாஜக, விசிக நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க