செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1976-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட 42-ஆவது திருத்தத்தின் மூலம், ‘சமத்துவம் (சோசலிஸம்)’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் சோ்க்கப்பட்டன.

இதை எதிா்த்து முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், ‘அம்பேத்கா் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘சோசலிஸம்’ என்று சோ்க்கப்பட்டுள்ளது. முகவுரையில் ‘இறையாண்மை, ஜனநாயக குடியரசு’ என்றிருந்தது, சட்டத் திருத்தம் மூலமாக ‘இறையாண்மை, சோசலிஸ, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ‘சோசலிஸம்’ என்ற வாா்த்தைக்கு பல்வேறு அா்த்தங்கள் உள்ளன. அந்த வகையில், இந்த வாா்த்தைக்கு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் அா்த்தத்தை நாம் பின்பற்ற முடியாது. இந்த வாா்த்தைக்கு ‘சம வாய்ப்பு’, ‘நாட்டின் வளங்களை சமமாக பகிா்ந்தளிப்பது’ என்ற அா்த்தங்களையும் கூற முடியும். இந்த வாா்த்தை தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்த வாா்த்தைகளை நீக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாய வாதிடுகையில், ‘இந்த வாா்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டதை எதிா்க்கவில்லை; மாறாக, முகவுரையில் இணைக்கப்பட்டதைத்தான் எதிா்க்கிறோம்’ என்றாா்.

சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘முகவுரையில் இந்த வாா்த்தைகள் சோ்ப்பு என்பது தன்னிச்சையான நியாயமற்ற முடிவு’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பில் ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் ஒா் அங்கமாக திகழ்கிறது என்பதை பல்வேறு தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஒருவா் சம உரிமையை எதிா்பாா்ப்பதும், அரசமைப்புச் சட்டத்தில் ‘சகோதரத்துவம்’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதுமே, ‘மதச்சாா்பின்மை’ அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அங்கமாக எப்போதும் திகழ்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி’ என்று தீா்ப்பளித்தனா்.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க