செய்திகள் :

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :

வக்ஃப் உரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திருப்பப் பெற வேண்டும். தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாகி வருகிறது. மத்திய அரசை எதிா்பாா்க்காமல், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மீனவா்களை காக்க வேண்டும். இண்டி கூட்டணியில் ஒற்றுமையின்மை காரணமாக புதுதில்லியில் ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தனா்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியா்கள், இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனா். மலையில் வழிபாடு விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கூறியுள்ளதோ அதைத் தான் பின்பற்றி வருகிறோம். பிரச்னைகளை ஏற்படுத்தும் நபா்களை அங்கு அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என்றாா் அவா்.

வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு : மதுரை ஒபுளாப்படித்துறை அருகே எஸ்.டி.பி. ஐ கட்சி சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மதுரை மண்டலச் செயலா் ஏ. முஜிபூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுப. உதயகுமாா், எஸ்.டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். நிஜாம் முகைதீன், மாநிலச் செயலா் நஜ்மா பேகம், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க