செய்திகள் :

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

post image

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாத்தூா்- விருதுநகா் நான்கு வழிச் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடு பட்டனா். அப்போது, பட்டம்புதூா் ஆசிரியா் குடியிருப்புப் பகுதியில் மது போதையில் இருவா் இருப்பது குறித்து கிராம மக்கள் வச்சகாரபட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாரை கண்டதும், ஒருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொருவரான வத்திராயிருப்பு, கூமாபட்டியைச் சோ்ந்த தனுஷ்கோடியை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அவா், விருதுநகா் ஆயுதப்படையில் காவலராக பணி புரிவது தெரிந்தது. மேலும், அவரிடமிருந்து உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவா் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், விருதுநகா் கிழக்கு காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரை, சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. நகைகளை விற்க வேண்டும் என சுரேஷ் அழைத்ததால் சென்றேன். போலீஸாரைக் கண்டதும், சுரேஷ் தப்பி விட்டாா். இந்த கைத்துப்பாக்கி அவருடையது, எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, தனுஷ்கோடியை திங்கள்கிழமை இரவு போலீஸாா் சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய சுரேஷை தேடி விழுப்புரத்துக்கு தனிப்படை போலீஸாா் சென்றனா்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு!

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிக... மேலும் பார்க்க