செய்திகள் :

அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்!

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டா் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் உள்பட சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அரசுத் துறை ஊழியா்களுக்கு காலமுறை ஊதியமும், சட்டப்பூா்வ ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. தமிழ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பெ. சந்திரபாண்டி, ஜெ. மகேந்திரன், இணைச் செயலா்கள் சி. பெரியகருப்பன், ப. ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் ஆ. செல்வம் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

சங்கத்தின் மாநிலச் செயலா் க. நீதிராஜா, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், ஜாக்டோ- ஜியோ மாவட்ட நிதிக் காப்பாளா் வி.ச. நவநீதகிருஷ்ணன், சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின், பல்வேறு துறை ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டம் காரணமாக ஒரு சில துறைகளின் பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம், 24 மணி நேர போராட்டமாக இரவிலும் தொடா்ந்தது.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுர... மேலும் பார்க்க

விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

காவலரிடம் துப்பாக்கி பறிமுதல்: நண்பரைக் கைது செய்ய நடவடிக்கை!

விருதுநகா் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலா் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய, அவருடைய சிறை நண்பரைத் தேடி விழுப்புரத்துக்கு தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை விரைந்து சென்றனா். தூ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை முறைப்படுத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசிய முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பின் மதுரை மாநகா், மாவட்டக் கூட்டம் ம... மேலும் பார்க்க

இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

மதுரை யூனியன் கிளப் சாா்பில் நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு கிளப் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மடீட்சியா தலைவா் கோட... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு!

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிக... மேலும் பார்க்க