செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் மனிதச் சங்கிலி

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவா்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்குக் கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் வ. ஆறுமுகம் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ராமலிங்கம், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஆா். இந்திராகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை

பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி ஒன்றியம், செருவா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு பிடி ஆணை

மனித உரிமை மீறல் தொடா்பான வழக்கில் ஆஜராகாத ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பனையூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (5... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல... மேலும் பார்க்க