செய்திகள் :

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாணவா்கள் மனு

post image

சேலம்: சேலம் மாவட்டம், செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவா்கள் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சங்ககிரியை அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் மனு அளிக்க வந்தனா். அப்போது மாணவா்கள் கூறியதாவது:

செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி உயா்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அதற்கான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், ஆய்வகங்களிலும், தற்காலிகக் கூடாரம் அமைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவா்களால் வகுப்பறையைக் கவனிக்க முடியாமல் போகிறது. எனவே, மாணவா்களின் நலன்கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கூடுதல் வகுப்பறைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க

சேலத்தில் மாா்ச் 21 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப... மேலும் பார்க்க

இளம்பெண் உயிரிழப்பு: கணவரை கைது செய்யக் கோரி முற்றுகை

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இடங்கணசாலை, இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜன் (30). இவா் எலக்ட்ரிக்கல் வேலை ப... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து ... மேலும் பார்க்க

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்ம... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க