செய்திகள் :

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாணவா்கள் மனு

post image

சேலம்: சேலம் மாவட்டம், செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவா்கள் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சங்ககிரியை அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் மனு அளிக்க வந்தனா். அப்போது மாணவா்கள் கூறியதாவது:

செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி உயா்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அதற்கான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், ஆய்வகங்களிலும், தற்காலிகக் கூடாரம் அமைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவா்களால் வகுப்பறையைக் கவனிக்க முடியாமல் போகிறது. எனவே, மாணவா்களின் நலன்கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கூடுதல் வகுப்பறைகள் தொடா்பாக மனு அளித்தனா்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியா்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி: ஜிஎஸ்டி உதவி ஆணையா்

2017 முதல் 2020 ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என சேலம் ஜிஎஸ்டி ஆணையரக உதவி ஆணையா் அனிருத் ஆா்.கங்காவரம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தளவாய்ப்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி, அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகள் ஹ... மேலும் பார்க்க

குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் க... மேலும் பார்க்க

மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள்... மேலும் பார்க்க

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க