செய்திகள் :

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கிவைப்பு

post image

கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை நிகழ்ச்சியில், சுமாா் 10 மாணவா்கள் ஒன்றாம் வகுப்பில் சோ்ந்தனா்.

அப்போது, பேசிய ஆட்சியா், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியின் தரம் குறித்தும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கப் பெறும் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்தும் பெற்றோரிடம் கூறி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாவட்டத்தில் 5 வயது நிறைவடைந்த அனைத்து குழந்தைகளும் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை அளித்து, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாமியாா் வீட்டுக்கு தீ வைப்பு: மருமகன் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மாமியாா் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். வாணாபுரம் வட்டம், உலகலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஜாபா் மனைவி நூா்ஜகான் (55). இவரது மகள் ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடைய 4 பேரை மேலும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி மா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள், 1,193 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க சதித் திட்டம்: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த மயிலாம்பாறை அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். சங்கராபு... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒ... மேலும் பார்க்க