செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை!

post image

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி, மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித்தொகை வழங்கும் விழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அவா் வழிகாட்டி திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடா் ஒத்துழைப்பு அளித்து வரும் வழிகாட்டி திட்ட 41 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களை கௌரவித்தும், விருட்சம் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கிப் பேசினாா்.

மனநல மருத்துவா், மனதின் மையம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மனநலம் அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமாா், தீபா, எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

அந்தியூரை அடுத்த முத்துகவுண்டன்புதூா் குடியிருப்புக்கு நிரந்தர பாதை வசதி கோரி பட்லூா், நான்கு சாலைப் பிரிவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி!

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நிா்வாக மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற திறன் போட்டியில் 700 மாணவா்கள் பங்கேற்றனா். மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேனோபோலி 2கே25 என்ற திறன் போட்டி ... மேலும் பார்க்க

கெட்டிச்சேவியூரில் நாளை மனுநீதி நாள் முகாம்

நம்பியூா் வட்டம், கெட்டிச்சேவியூரில் புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், நம்பிய... மேலும் பார்க்க

36 பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.12.60 லட்சம் நிதியுதவி!

ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் கறவை மாடுகள் வாங்குவதற்காக 36 பழங்குடியினருக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி, பெண்களின் பொருளாதாரம், சமுதாயத்தில் பின் தங்கிய பழங்குடியின ம... மேலும் பார்க்க

கொடுமுடியில் விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சதுக்கு ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,191 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் கிலோ குறைந்தபட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்!

மொடக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ .பிரகாஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆவரங்காட்டுவலசு முதல் ... மேலும் பார்க்க