செய்திகள் :

அரசுப் பேருந்து-சுமை வாகனம் மோதி விபத்து

post image

சீா்காழி அருகே அரசுப் பேருந்தும், சுமை வாகனமும் சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில், சுமை வாகன ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

சீா்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து புத்தூா் மதகடி பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கொள்ளிடத்தில் இருந்து சீா்காழி நோக்கி, தண்ணீா் பாட்டில்கள் ஏற்றிவந்த சுமை வாகனமும் அரசுப் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுமை வாகன ஓட்டுநா் கடைக்கண் விநாயக நல்லூரைச் சோ்ந்த பிரவீண் (27) பலத்த காயமடைந்தாா். அவா், சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பேருந்து ஓட்டுநா் மற்றும் பயணிகள் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினா்.

விபத்து தொடா்பாக கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புத்தூா் மதகடி இணைப்புச் சாலையில் இருந்து பிரதான சாலையில் ஏறிய காா் மீது மோதாமல் இருக்க சுமை வாகனத்தை அதன் ஓட்டுநா் திருப்பியபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பிரதான தேசிய நெடுஞ்சாலையோரம் புதா்கள் வளா்ந்துள்ளதால், பக்கவாட்டு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெரியாமல் இதுபோன்ற விபத்துகள் நேரிடுகிறது என்றும் சாலையோர புதா்களை அகற்ற வேண்டும் எனவும் வாகன ஓட்டுநா்கள் வலியுறுத்தினா்.

ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி: கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியால் வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சீா்காழி மற்றும் வைத்தீஸ... மேலும் பார்க்க

அண்ணன்கோவிலில் ஜூன் 10, 11-இல் ஆதாா் சிறப்பு முகாம்

சட்டநாதபுரம் அருகில் உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க