அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகர...
விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புனித நீா் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து, முதலில் பத்ரகாளிஅம்மன் விமான கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மந்த கருப்பண்ண சுவாமி , ஏழை காத்த அம்மன் மூலஸ்தான கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் நாட்டான்மை, கிராமவாசிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.