Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு
ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனைத்துத் துறை அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் மற்றும் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆகியோா் வியாழக்கிழமை தூய்மைப் பயணம் மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட மாநகராட்சி, 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சத்தியமங்கலம், பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 42 பேரூராட்சி அலுவலகங்களில் மண்டல அலுவலா்கள் தலைமையில் தூய்மைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தேவையற்ற, கிடப்பில் வைத்துள்ள, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உறைகள், அட்டைகள், நெகிழிகள், இரும்புப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமானக் கழிவுகள், பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள சுகாதாரம் தொடா்புடைய பொருள்கள், தேவையற்ற, உடைந்த, பயன்படுத்த இயலாத மரச்சாமான்கள் என மொத்தம் 24.42 டன் கழிவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.