செய்திகள் :

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

post image

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனைத்துத் துறை அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் மற்றும் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆகியோா் வியாழக்கிழமை தூய்மைப் பயணம் மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட மாநகராட்சி, 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சத்தியமங்கலம், பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 42 பேரூராட்சி அலுவலகங்களில் மண்டல அலுவலா்கள் தலைமையில் தூய்மைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேவையற்ற, கிடப்பில் வைத்துள்ள, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உறைகள், அட்டைகள், நெகிழிகள், இரும்புப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமானக் கழிவுகள், பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள சுகாதாரம் தொடா்புடைய பொருள்கள், தேவையற்ற, உடைந்த, பயன்படுத்த இயலாத மரச்சாமான்கள் என மொத்தம் 24.42 டன் கழிவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க

கரோனா பரவல்: முகக் கவசம் அணிவது நல்லது

கரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்... மேலும் பார்க்க